சென்னை: வரும் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என உணவு வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார். மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உணவு வழங்கல் துறை ஆணையர் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடக்கிறது. வரும் 11ம் தேதி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை என்ற முறையில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்பணியை செய்ய வேண்டி இருப்பதால் 11ம் தேதி ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதில் 16ம் தேதி விடுமுறை நாள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *