சென்னை: ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் அமர்த்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் 2896 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக ஆட்களை தேர்வு செய்யும் வரை ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.க்களை தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தார்.அதை ஏற்று 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *