dhanush-26102015தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியான ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் இந்த படத்தின் வசூல் திருப்தியாக இருப்பதாகவும், எதிர்பார்த்த வசூலை விட அதிகம் இருந்ததாகவும், விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனுஷ் தயாரிப்பில் முதன்முதலாக நடித்த விஜய்சேதுபதிக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ள நிலையில் மீண்டும் தனுஷின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்தில் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கி சட்டை’ ஆகிய இரண்டு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதை அடுத்து தற்போது விஜய்சேதுபதியும் இரண்டாவது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் ‘நானும் ரெளடிதான்’ படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.English summary-Actor vijay sethupathi to again join hands with dhanush.