ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் 4 மாதங்களில் தொடங்குகிறது. சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மிக முக்கிய பேருந்து நிலையமாக விளங்கிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது. சென்னையில் உள்பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தால் குறிப்பாக தொடர் விடுமுறை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றி, செல்வதற்கு வசதியாக அயன்சேரி முதல் மீனாட்சிபுரம் வரையிலும், ஆதனூர் முதல் மாடம்பாக்கம் வரையிலும் சிவேகே. சாலை முதல் ஊரப்பாக்கம் வரையிலும், புது சாலை அமைக்கும் பணிகள் குறித்தும், முடிச்சூர் பகுதியில் புதிதாக ஆம்னி பேருந்து நிறுத்தம் உள்ளிட்டவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு முன்வைத்த கோரிக்கையை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் அதற்கான ஒப்புதல் வழங்கி உள்ளார். கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைப்பதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியையும் தெற்கு ரயில்வேக்கு சிஎம்டிஏ வழங்கியுள்ளது. இந்த பணிகள் இன்னும் 4 மாதங்களில் தொடங்க உள்ளது. மேலும், 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை -செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இது வண்டலூருக்கும் ஊரப்பாகத்திற்கும் இடையே அமைய உள்ளது. இதனால் சென்னையின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை எளிதில் வந்தடைய முடியும். சென்னை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *