சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். 27ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.

மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 31ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

தொடர்ந்து 19ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 20ஆம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *