Sanmugapandiyanவிஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியனின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘சகாப்தம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்ய தவறிவிட்ட நிலையில் விஜயகாந்த் தனது மகன் சண்முகப்பாண்டியனுக்காக மற்றொரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

தற்போது மருத்துவ சிகிச்சைக்காக மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றுள்ள விஜயகாந்த், மீண்டும் இந்தியா திரும்பியவுடன் மகனின் இரண்டாவது படத்திற்கான கதையை கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதல் படத்தில் சுரேந்திரன் என்ற புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த் மகனின் இரண்டாவது படத்தை பிரபல இயக்குனர் ஒருவரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெறவிருப்பதால், அதற்கு முன்பே மகனின் இரண்டாவது படத்தை முடித்துவிட வேண்டும் என்று விஜயகாந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.