கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்த சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ திரைப்படம் நேற்று 25வது வெற்றி நாளை எட்டியுள்ளதால் சந்தானம் உள்பட படக்குழுவினர் உற்சாகத்துடன் உள்ளனர்.

இந்நிலையில் சந்தானம் தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், அவரை வைத்து படம் தயாரிக்க இரண்டு முன்னணி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் ஒரு நிறுவனத்தின் படத்தை பிரபல முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது காமெடி வேடத்தில் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு சந்தானம் முழுக்க முழுக்க இனிமேல் ஹீரோ வேடங்களில் மட்டுமே நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சந்தானத்துடன் ஜோடியாக நடிக்க முன்பு யோசித்த நடிகைகள் கூட, தற்போது தங்கள் மனதை மாற்றிக்கொண்டு அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கொடுத்தால் ஓகே சொல்லும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.

English Summary : After “Inime Ipadithan” successful 25 days run, two leading productions are negotiating to produce Santhanam as hero.