87753564எம்.பி.பி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் (அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு) 2016-17-ம் ஆண்டுக்கான ஒற்றைச் சாளர முறையில் பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பிஎன்ஒய்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் பட்டப் படிப்புகளில் சேர 12ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

6 அரசு கல்லூரிகளில் 356 இடங்களும், 21 சுயநிதி கல்லூரிகளில் 809 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 28-ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம், கோட்டார் அரசு இந்தியமுறை மருத்துவக் கல்லூரிகளில் அலுவலக வேலைநாட்களில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக்குழு அலுவலகத்தில் ஜூலை 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Siddha announcement last date to apply for study