simbu-sing-thillalangadi-movie-song_2_010607123நடிகை சுஹாசினி இயக்கிய இந்திரா’ என்ற படத்தில் அறிமுகமான நடிகை அனுஹாசன், அதன்பின்னர் ஆளவந்தான், ரன், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், ஆதவன் போன்ற பல படங்களில் நடித்தார். இடையில் சில காலம் நடிப்பில் இருந்து விலகி ‘காபி வித் அனு’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை வழங்கினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கோலிவுட்டில் ஹீரோயினியாக ரீ எண்ட்ரி ஆகியுள்ளார் அனுஹாசன்.

லண்டன் வாழ் தமிழர் என்.டி.நந்தா ஒளிப்பதிவு செய்து இயக்கும் ‘வல்லதேசம்’ என்ற படத்தின் மூலம் அனுஹாசன் ரீ எண்ட்ரி ஆகியுள்ளார். கணவர் மற்றும் குடும்பத்துடன் லண்டன் செல்லும் தமிழ் பெண், அங்கு எதிர்பாராதவிதமாக குழந்தையை தொலைத்துவிடுகிறார். குழந்தையை கண்டுபிடிக்க அனுஹாசன் செய்யும் சாகஸங்கள்தான் படத்தின் கதை.

இந்த படத்தின் படப்பிடிப்பு 80%வரை முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்காக சமீபத்தில் ஒரு பாடல் சென்னையில் ஒலிப்பதிவு செய்ய்ப்பட்டது. பழம்பெரும் இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதன் அவர்களின் மகன் முத்துகுமாரசாமி கம்போஸ் செய்த விறுவிறுப்பான பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

துன்பமும் தோல்வியும் வரும்போது துவண்டு விடக்கூடாது என்ற கருத்துக்களுடன் உருவாகியிருந்த அந்த பாடலை சிம்பு மிக அபாரமாக பாடியுள்ளதாக முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார். இது சிம்பு பாடிய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

English Summary:Simbu has sung song in Anu Hassan Flim