தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு மூலமாக 1,241 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான போட்டித்தேர்வு வரும் ஜூலை மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தற்பொழுது முதலே விண்ணப்பதாரர்கள் தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் பயிற்சி மையம் சார்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பயிற்சியின் வகுப்புகள் வரும் 20ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 044-26618056, 99406-38537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயிற்சிகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என பெரியார் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.

English Summary: Special Coaching Classes for TNPSC Group II Exams in Chennai.