train-281115ஒவ்வொரு பண்டிகை தினத்தின்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் நிலையில் அடுத்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் மற்றும் வரும் ஜனவரியில் வரவுள்ள புத்தாண்டு மற்றும் பொங்கல் தினங்களை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக பண்டிகை கால சிறப்பு ரெயில் குறித்த அறிவிப்பின் முழுவிபரம் பின்வருமாறு:

நெல்லை – செங்கல்பட்டு சிறப்பு ரயில்: நெல்லையில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24 மற்றும் 31-ந் தேதிகளில் அதாவது ஒவ்வொரு வியாழக்கிழமையும் பிற்பகல் 3.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(வ.எண்:06134), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

அதேபோல் மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் அதாவது வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(வ.எண்:06135), மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

நாகர்கோவில் – செங்கல்பட்டு: நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 6 மற்றும் 13-ந் தேதிகளில்(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில்(வ.எண்:06136), அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 7 மற்றும் 14-ந் தேதிகளில்(திங்கட்கிழமை) பகல் 12.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(வ.எண்:06137), அடுத்தநாள் காலை 4.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

கோவை – செங்கல்பட்டு: கோவையில் இருந்து டிசம்பர் 3, 6, 8, 10, 13, 15, 17, 20, 22, 24, 27, 29, 31 மற்றும் ஜனவரி 3, 5, 7, 10, 12, 14, 17, 19 மற்றும் 21-ந் தேதிகளில் இரவு 10.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(வ.எண்: 06144), மறுநாள் காலை 8 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 4, 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25, 28, 30 மற்றும் ஜனவரி 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20 மற்றும் 22-ந் தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(06145), மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு கோவையை சென்றடையும்.

விசாகப்பட்டினம் – செங்கல்பட்டு: விசாகப்பட்டினத்தில் இருந்து நாளை முதல் ஜனவரி 24-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) இரவு 11 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(வ.எண்:08567), செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 1-ந் தேதி முதல் ஜனவரி 26-ந் தேதி வரை (செவ்வாய்க்கிழமைகளில்), காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(வ.எண்: 08568), மறுநாள் பகல் 1.45 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும்.

இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு தெற்கு ரயில்வேயின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English summary-Special trains for Christmas,new year & pongal