சென்னை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரத்தில் இருந்து, 22, 23ல், காலை, 10:00 மணிக்கு

இயக்கப்படும் ரயில், 12:00 மணிக்கு, திருவண்ணாமலை சென்றடையும் திருவண்ணாமலையில் இருந்து, 22, 23ல், மதியம், 1:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், 2:45 மணிக்கு, விழுப்புரம் சென்றடையும் விழுப்புரத்தில் இருந்து, 22, 23ல், இரவு, 10:00 மணிக்கு இயக்கப்படும் ரயில், 11:40 மணிக்கு, திருவண்ணாமலை சென்றடையும்

திருவண்ணாமலையில் இருந்து, 23, 24ல், அதிகாலை, 4:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், 5:05 மணிக்கு, விழுப்புரம் சென்றடையும் வேலுார் கண்டோன்மென்டில் இருந்து, 22, 23ல், இரவு, 9:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், 11:20 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் திருவண்ணாமலையில் இருந்து, 23, 24ல், அதிகாலை, 4:15 மணிக்கு இயக்கப்படும் ரயில், 5:55 மணிக்கு, வேலுார் கண்டோன்மென்ட் சென்றடையும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *