இன்று (ஜன19) திருவரங்கம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் காலை 11 மணி அளவில் துவங்கியது. திருவரங்கம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேட்புமனு தாக்களை, தேர்தல் அதிகாரியும் ஆர்.டி.ஓவும் ஆன திரு. மனோகரன் மற்றும் தொகுதி துணை தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான திரு. காதர் மொய்தீன் அவர்களிடமும் மனு தாக்கல் செய்யலாம். வரும் ஜன27 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜன28 மனு பரிசீலனை நடைபெறும். வேட்ப்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஜன30 பின்னர் 5.30 மணிக்கு வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். அடுத்த மாதம் (பிப்13)ஆம் தேர்தலும், பிப்16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். மேலும், வேட்பாளர் தன்னுடைய மனுவை தாக்கல் செய்ய வரும்பொழுது தன்னுடன் நான்கு பேர் மட்டும் அனுமதிக்க படுவார்கள் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.