ஒவ்வொரு ஆண்டும் சமுதாய வளர்ச்சிக்கு சேவை செய்யும் இளைஞர்களை தேர்வு செய்து ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’ வழங்கப்படுவது வழக்கம். அதுபோல் இந்த வருடத்திற்கான இளைஞர் விருதுக்கு வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

ரூ.20 ஆயிரம் ரொக்கம், பதக்கம், மற்றும் பாராட்டு சான்றிதழ் அடங்கிய இந்த விருது சிறந்த சமுதாய சேவை செய்த 3 பெண்கள் மற்றும் 3 ஆண்களுக்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.

இந்த விருதுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் இளைஞர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்ப படிவம் குறித்த தகவல்களுக்கு www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தையும், சென்னை மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தையும் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

English Summary : State Youth Award is going to conduct on 30th April this year. Young people can apply before 5 pm on April 30th, announced by Chennai District Sports Officer.