மும்பை பங்குச்சந்தை இன்று காலையில் ஏற்றத்துடனே துவங்கியது. காலையில் 133 புள்ளிகள் உயர்ந்து 29,133.62 என்ற அளவில் இருந்தது. அதேபோன்று, தேசிய பங்குச்சந்தையான நிப்டி 36.30 புள்ளிகள் உயர்ந்து 8,792.85 என்ற அளவிலும் உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 11 பைசா அதிகரித்து 61.56 ரூபாயாக உள்ளது. அமெரிக்க டாலரின் தேவை இன்று சற்று குறைந்துள்ளதே இந்த உயர்வுக்கு கரணம் என்று போரெக்ஸ் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

English Summary: Stock Market and Indian Money Value increased Today.