பொதுமக்கள் / மாணவர்கள், இன்று (05.03.2015) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

புகார்கள் மற்றும் கருத்துக்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், அரசுத் தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 8012594101, 8012594116, 8012594120, 8012594125 இந்த தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்து பயன்பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குனர் கூறியுள்ளார்.

English Summary: Students and Public are instructed to call the control room for their doubts and reports.