தமிழகத்தில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தியது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இன்று தொடங்கியது. சான்றிதழ் சரிபார்க்கும் பணி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது. 590 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதே போல மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் இன்று நடந்தது.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் சான்றிதழ் சரி பார்ப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.

பின்னர் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–

குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும். குரூப்–4 தேர்வு முடிவு இன்னும் 45 நாட்களில் வெளிவரும்.

English Summary: Group-2 results will be announced in a week and Group-4 results will in a month says TNPSC President.