police652013சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும் ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாகவும் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று 5 காவதுறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இதன்படி, காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் சுந்தரமூர்த்தி, கண்ணன், ஸ்ரீதேவி, வெங்கடேசன், பழனி ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர், முதல் முறையாக சென்னை பெருநகர காவல்துறையில் 5 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதில், மீன்பிடி துறைமுக காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, பள்ளிக்கரணை குற்றப்பிரிவுக்கும், காசிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பி.பழனி, வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர்கள் ஓரிரு நாள்களில், புதிய இடங்களில் பொறுப்பேற்பார்கள் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

English Summary: suddenly 5 police inspectors transferred in Chennai