வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். சில இடங் களில் இடியுடன் மழை பெய்யக் கூடும்.

தயே புயல் கரையை கடந்தது வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தயே’ புயலாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே கோபால்பூர் அருகில் நேற்று கரையைக் கடந்தது. தற்போது தெற்கு ஒடிசாவின் உள் பகுதியில் சற்று வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *