மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்) இலவச பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் `மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ் நடத்தி வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 20-ம் தேதியில் இருந்து 24-ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.

தேர்வர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் அனைத்தும் மாணவிகள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.

நுழைவுத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம்:

இராணி மேரி கல்லூரி, சென்னை – 01.12.2022/ வியாழன் – காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை

மீனாட்சி மகளிர் கல்லூரி, மதுரை – 01.12.2022/ வியாழன் – காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை

ஆன்லைன் மூலமாக விண்ணபிக்க கடைசி நாள்: 24.11.2022

எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்: 05-12-2022

மேலும் விவரங்களுக்கு: smgacw.org க்ளிக் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *