தென் மேற்கு பருவ மழை, வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ளது. இதனால், தென் மாநிலங்களில், மழை குறைந்துள்ளது.தமிழகத்தில், இரண்டு நாட்களாக மிதமான வெயில் நிலவுகிறது. தமிழகத்தில், நேற்று அதிகபட்சமாக, நாகை மற்றும் திருச்சியில், 38 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், ஜெயங்கொண்டத்தில் அதிகபட்சமாக, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.இந்நிலையில், ‘தமிழகத்தின் தென் மாவட்டங்களில், இன்றும், நாளையும் பரவலாக, மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துஉள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *