முக்கிய தலைவர்களின் பிறந்த நாள் உள்பட ஒருசில முக்கியமான நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடுவது வழக்கம். இந்நிலையில் வரும் ஞாயிறு அன்று உழைப்பாளர் தினம் எனப்படும் மே தினம் வருவதை அடுத்து மே 1ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

வரும் மே 1ஆம் தேதி சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானடைகள், உரிமம் பெற்ற பார்கள் என அனைத்தையும் மூட என்றும் அன்றைய தினத்தில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

English Summary : Chennai collector ordered TASMAC shops and bars to be closed on 1st May.