தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் 26ம் தேதி தொடங்குகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் மழை பெய்தது. இதனைதொடர்ந்து மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால் தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்தது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்தது. மேலும் தமிழகத்தில் 26ம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சமீபத்தில் கூட தமிழகத்தில் பருவ மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. பின்னர், ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது. அந்தப் புயல் சின்னம், ஆந்திர பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்கு சென்றது. இது வடகிழக்குப் பருவ மழை துவங்குவதற்கான சூழல் என கூறியது. மேலும் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 12 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணிக்கபட்டுள்ளது. தமிழகத்தின் சராசரி மழை அளவான 44 செ.மீ பதில் 50 செ.மீ மழை பதிவாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *