சென்னை: ‘ராணுவத்தில் சேர விரும்புவோர் மே 18க்குள், ‘ஆன்லைன்’ வழியாக விண்ணப்பிக்கலாம்’ என சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஜூன் 7 முதல் 17ம் தேதி வரை கடலுார் மாவட்டம் நெய்வேலியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

சென்னை தலைமை அலுவலகத்தின் கீழுள்ள, கடலுார், வேலுார், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தோர் முகாமில் பங்கேற்கலாம். படை வீரர்கள் பிரிவில், தொழில்நுட்பம், விமான தொழில்நுட்பம் வெடி பொருட்கள் ஆய்வாளர் செவிலிய உதவியாள, அலுவலர் உட்பட பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில் பங்கேற்க விரும்புவோர், www.joinindianarmy.nic.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப பதிவு 9ல் துவங்கி விட்டது மே 18ல் அவகாசம் முடிகிறது. விண்ணப்பித்தோர் மே, 20க்கு பின் தங்களின் அனுமதி அட்டையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆள்சேர்ப்பு வெளிப்படையாக நடைபெறுவதால் மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *