சென்னை: தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் மூன்று வாரங்களாக பருவமழை குறைந்துள்ளது. சில இடங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்கிறது.

‘தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யலாம்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேலுார் மாவட்டம் ஆம்பூரில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *