நாடு முழுவதும், வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இதுவரை 55 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். இந்தப் பணிகள் வரும் 2023 மார்ச் மாதம் வரை நடைபெறும்.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று (09.11.2022) முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

சென்னையில் மாநகராட்சி கமிஷனரும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பம் அளிக்கலாம். வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரடியாகவோ, தாலுகா அலுவலகங்களில் அதிகாரிகளிடமோ, `nvsp’ என்ற இணையதளம், செயலி வாயிலாகவோ திருத்தம் மேற்கொள்ளலாம்.

இம்மாதம் 12, 13 (சனி, ஞாயிறு) மற்றும் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கும். இதே காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்களை இணைப்பதற்கான மனுக்களையும் அளிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *