தாம்பரம்-செங்கல்பட்டு இடையே உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 30 வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி வார நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு பிற்பகல் 12.30, 1.09, 1.47 மணிக்குப் புறப்படும் ரயில்கள், தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 1.50, 2.25, 3.05 மணிக்குப் புறப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு பிற்பகல் 12, 12.30, 1.15 மணிக்குப் புறப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 1.50, 2.25, 3.05 மணிக்குப் புறப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூருக்கு காலை 9.50 மணிக்குப் புறப்படும் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்படும் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் வழக்கமான நேரங்களில் அனைத்து ரயில்களும் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

English Summary : Due to Maintenance work Tambaram to Chengalpattu train schedule has been change form 16 to 30 of this month.