சென்னை: கனமழை காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் ஏற்கபட்டுள்ளது. ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வரும் தொடர் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணமாலை, விழுப்புரத்தில், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் கன்னியாகுமரி, காரைக்கால், மன்னார்குடி, ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் ஏற்கப்பட்டுள்ளது. ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *