trainசென்னை எழும்பூர் முதல் மதுரை வரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சென்னை எழும்பூர் முதல் காரைக்குடி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை நாளை ஞாயிற்றுக்கிழமை அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு-விழுப்புரம் பகுதியில் உள்ள கருங்குழி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இந்த இரண்டு ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தென்னக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்:12635), ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து நாளை பிற்பகல் 3.45 மணிக்கு காரைக்குடிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்(12605), ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து நாளை காலை 7 மணிக்கு சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும்(12636), காரைக்குடியில் இருந்து நாளை காலை 4.30 மணிக்கு எழும்பூருக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலும்(12606), ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Vaigai, pallavan Express trains Cancelled Tomorrow.