Vandalur Zooநாளை குடியரசு தின விழாவை அடுத்து அரசு விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளுக்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு நாளை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காக்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை குடியரசு தினவிழாவை முன்னிட்டு வழக்கம் போல் செயல்படும் என்றும் பொதுமக்கள் விடுமுறையை சிறப்பாக கழிக்க இந்த இரண்டு பூங்காக்களையும் பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது குறித்து பூங்கா நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது, “ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்புப் பணிகளுக்காக பூங்கா விடுமுறை தினமாகும். எனினும் குடியரசு தின அரசு விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம்போல் செயல்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Vandalur, Guindy National Park operating on Account of Republic Day.