கோயம்பேடு சந்தைக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200 க்கு விற்கப்பட்டது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி 240 வரை விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக, இஞ்சி வியாபாரிகள் ஒருவர் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி சாகுபடி நிறுத்திவிட்டனர். இதனால் தான் இஞ்சி வரத்து குறைந்தது. இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் வரை நீடிக்கும் என்றார் அவர்.

இதேபோல, வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 110-க்கு விற்பனையானது. சில்லறை கடைகளில் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *