விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று காலை 9.30 மணிக்கு சொல்லின் செல்வர் திரு.மணிகண்டன் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகிறது.

இறை நெறியிலும், இல்லற நெறியிலும் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

இறை நெறியிலும், இல்லற நெறியிலும் சிறந்து விளங்குபவர்கள் ஆண்களே என்ற அணியில் திரு.ரவிக்குமார், திரு.உமாசங்கர், திரு.தாமல் சரவணன் ஆகியோரும், பெண்களே என்ற அணியில் திருமதி.சுசித்ரா, திருமதி.கார்த்திகா, திருமதி.எழிலரசி ஆகியோரும் பேசுகின்றனர்.

இரு அணிகளை சேர்ந்தவர்களும் சிரிப்பதோடு, சிந்திக்கவும் வைக்கும் பல கருத்துக்களை அழகிய தமிழில், நேர்த்தியுடன் முன்வைத்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவு பகுதியில் இரு தரப்பு வாதங்களை சீர்தூக்கி, பகுப்பாய்ந்து அற்புதமான தீர்ப்பை நிகழ்ச்சியின் நடுவர் வழங்கியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி – பாமாலை

ஜெயா டிவியில் வரும் விநாயகர் சதுர்த்தியன்று காலை 8.30 மணிக்கு பாமாலை என்ற சிறப்பு இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற கடம் வித்வான் திரு.உமாஷங்கர் அவர்கள் தன் இசைக்குழுவினருடன் பிரபலமான தமிழ் பக்திப்பாடல்களை இசைத்துள்ளார். விநாயகனே வினைத்தீர்ப்பவனே, கிருஷ்ணா முகுந்தா முராரே, மருதமலை மாமணியே உள்ளிட்ட பாடல்கள் அனைத்தும் ஆன்மீக இசைப்பிரியர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும்.

“விஷ் யூ விநாயகா”

ஜெயா மேக்ஸ் தொகுப்பாளர்கள் இளவேனில் ,ப்ரீத்தி ,யாதவி ,மஞ்சு,பூஜா ,ஹரி ,ஹரிஷ் , ரிதி ,சந்தியா இஜாஸ், ஆகியோர் இணைந்து கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சி “விஷ் யூ விநாயகா”.இந்த நிகழ்ச்சியில் விநாயகருக்கு பிடித்த விசயங்களை வைத்து ஆட்டம் பட்டம் கொண்டாட்டங்களுடன் கொண்டாடும் இந்நிகழ்ச்சி பகல் 12:00 மணிக்கு விநாயகர் சதுர்த்தி அன்று ஜெயா டிவில் ஒளிபரப்பாகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *