பனை ஓலைக் கொழுக்கட்டை :

தேவையான பொருட்கள் :

சுமார் 10 பேருக்கு
சிவப்புப் பச்சரிசி – 1 கிலோ
வெள்ளை சர்க்கரை/கருப்பட்டி – 1 கிலோ
தேங்காய் – 2 மூடி
ஏலக்காய் – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
தேவையான பனை ஓலைகள்

செய்முறை :

  • சிவப்புப் பச்சரிசியைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, துணியில் பரப்பி உலர வைத்து, பின்பு பொடித்து சலித்துக் கொள்ளவும்.
    இதற்கிடையே, பனை ஓலையின் மடிப்பான பகுதிகளை ஒரு அடி நீளத்தில் துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு இரண்டு பக்கமும் முனைகளை வெட்டவும்.
  • பின்பு மாவை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதில் துருவிய தேங்காய், பொடித்த ஏலம், சுக்குப் பொடி, சர்க்கரை அல்லது கருப்பட்டி இவற்றுடன் தண்ணீர் தெளித்து கட்டியில்லாமல் பக்குவமாக பிசைய வேண்டும்.
  • துண்டு துண்டாக வெட்டப்பட்ட பனை ஓலையில் மடிப்பான பகுதியில் நடுவில் மாவை வைத்து ஓலையை சேர்த்து மூடவும்.
  • அதன் மேல் இன்னொரு பனை ஓலையை வைத்து இரண்டையும் சேர்த்து மாவு வெளியே தெரியாதவாறு ஓலை நாரில் கட்டி விட வேண்டும்.
  • குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, தேவையில்லாத ஓலைகளை தண்ணீரில் போட்டு (வாசனைக்காக), கட்டப்பட்ட ஓலைகளை உள்ளே நிறுத்தி வைக்கவும்.
  • இந்த கொழுகட்டைகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • இந்த பனை ஓலைக்கொழுக்கட்டை 3 நாள் வரை கெடாமல் சுவையாகவும், பனை ஓலையின் வாசத்துடன், சத்துமிக்கதாகவும் இருக்கும்.
  • பரிசுப் பொருளைப் போல் பிரித்து திறந்து உண்ண வேண்டிய பலகாரம் என்பதால் பார்க்கும்போதே உற்சாகமூட்டும், குறிப்பாக குழந்தைகளுக்கு.

வாழை இலை கொழுக்கட்டை :

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – 3/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சிறிது
பாசிப்பருப்பு – 1/2 கப்
நாட்டுச் சர்க்கரை – 3/4 கப்
தண்ணீர் – 1/2 கப்
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
செய்முறை :

  • முதலில் நாட்டுச் சர்க்கரையையை வெதுவெதுப்பான நீரில் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை அடுப்பில் வைத்து, ஓரளவு கெட்டியாக வந்ததும், அதனை இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு பௌலில் அரிசி மாவு, உப்பு சேர்த்து கிளறி, சுடுநீரை கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பிடியைக் கொண்டு கிளறி விட வேண்டும். ஏனெனில் சுடுநீர் பயன்படுத்துவதால், மிகவும் சூடாக இருக்கும்.
  • பின்பு மாவானது சற்று வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின்னர், கையால் மென்மையாக பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து அதில் தண்ணீரை ஊற்றி, மென்மையாக வேக வைக்க வேண்டும்.
  • பின் அதனை நன்கு மசித்து, பின் அதில் வெல்லப் பாகு சேர்த்து மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். அப்படி கொதிக்க விடும் போது, அதில் உள்ள நீர் முற்றிலும் வற்றியதும், நெய் சேர்த்து பிரட்டி சிறிது நேரம் பிரட்டி குளிர விட வேண்டும்.
  • பிறகு வாழை இலையை சதுரங்களாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுத்து ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் சிறிது தடவி, எலுமிச்சை அளவு பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து உருண்டையாக உருட்டி, பின் வட்டமாக தட்டி, அதன் ஒரு பாதியில் பாசிப்பருப்பு கலவை சிறிது வைத்து, வாழை இலையுடன் சேர்த்து மடித்துக் கொள்ள வேண்டும். அப்படி மடிக்கும் போது, முனைகளை நன்கு ஒட்டி விட வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
  • பின் இட்லி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். அதற்குள் இட்லி தட்டில் மடித்து வைத்துள்ள வாழை இலைகளை வைத்து, இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 10-12 நிமிடம் வேக வைத்து இறக்கினால், வாழை இலைக் கொழுக்கட்டை ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *