தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் ஏற்கனவே வாக்காளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியாகியுள்ள புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இதற்காக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை வாக்காளர்களாக சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது:

நடப்பாண்டில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.20 அன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, வாக்காளர் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாகச் சேர்க்க மாவட்ட தேர்தல் அலுவலகம், சென்னை மாநகராட்சி ஆகியவை நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, சென்னையில் உள்ள 30 கல்லூரிகளில் மார்ச் 7 முதல் 11-ஆம் தேதி வரை 5 நாள்களுக்கு வாக்காளர்கள் சேர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும், மாணவர்கள் படிவம்-6-ஐ இணையதளம் மூலமாக பூர்த்தி செய்யலாம்.

முகாம்கள் நடைபெற உள்ள கல்லூரிகள் விவரம்:

மார்ச்-7: டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி வியாசர்பாடி, கேசிஎஸ் காசி நாடார் கலை, அறிவியல் கல்லூரி-ஆர்.கே.நகர், சர்.தியாகராய கல்லூரி- பழைய வண்ணாரப்பேட்டை, முத்துக்குமார சுவாமி கல்லூரி-கொடுங்கையூர், திருத்தங்கல் நாடார் கல்லூரி- சூசலவாயல், பாரதி பெண்கள் கல்லூரி.

மார்ச்-8: புதுக்கல்லூரி-ராயப்பேட்டை, மாநிலக் கல்லூரி- சேப்பாக்கம், காயிதே மில்லத் அரசு மகளிர் கலை கல்லூரி-அண்ணாசாலை, ராணி மேரி மகளிர் கல்லூரி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் அறிவியல் கல்லூரி- அண்ணாசாலை, பக்தவச்சலம் மெமோரியல் கல்லூரி-கொரட்டூர்.

மார்ச்-9: சி.கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி- அண்ணாநகர், டிஜி.வைஷ்ணவ கல்லூரி- அரும்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி- அண்ணாநகர், லயோலா கல்லூரி-நுங்கம்பாக்கம்.

மார்ச்-10: எம்ஓபி.வைஷ்ணவ கல்லூரி- நுங்கம்பாக்கம், ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா ஆண்கள் கல்லூரி-மயிலாப்பூர், ஸ்டெல்லா மேரிஸ் மகளிர் கல்லூரி, சென்னை மகளிர் கிறித்துவ கல்லூரி-நுங்கம்பாக்கம், மீனாட்சி மகளிர் கல்லூரி-கோடம்பாக்கம், ஏ.எ.கலை அறிவியல் கல்லூரி-கோயம்பேடு, நந்தனம் ஆண்கள் அரசு கல்லூரி.

மார்ச்-11: ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் மகளிர் கல்லூரி-தேனாம்பேட்டை, குமார ராணி மீனா முத்தைய்யா கலை, அறிவியல் கல்லூரி-அடையாறு, செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர் கல்லூரி- அடையாறு, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி- மேற்கு சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர். ஜானகி கலை, அறிவியல் கல்லூரி- அடையாறு, குரு ஸ்ரீ ஷாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Voter’s list special camp for college students between March 7th to March 11th.