இந்திய சினிமாத்துறையினர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மிக உயரிய விருது தாதா சாகேப் பாலே விருது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் திரையுலகில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் உள்பட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டுக்கான தாதே சாகேப் பால்கே பெருது பழம்பெரும் பாலிவுட் நடிகர் மனோஜ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுளது.

இந்திய அரசால் கடந்த 1969ஆம் ஆண்டு முதல் வழங்கப்ப்ட்டு வரும் விருது இவ்வருடம் மனோஜ்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே மத்திய அரசு கடந்த 1992ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து கெளரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் பாலிவுட் நடிகர் சசிகபூர் தாதா சாகேப் விருதை பெற்ற நிலையில் இந்த வருடமும் பாலிவுட் நடிகர் மனோஜ்குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Dadasaheb Phalke award for actor Manoj Kumar.