metro_train_0205சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் மெட்ரோ ரயில் சேவை கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூரி வரை தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆலந்தூர்- விமான நிலையம் இடையே உயர் மட்ட பாதையில் சேவையை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. ரெயில் நிலையங்களின் கட்டுமான பணி, தண்டவாளம் அமைக்கும் பணி, மின் கம்பி அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து அந்த பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூரில் இருந்து அதிகாரிகள் முழு ஆய்வு நடத்தி அறிக்கை தர இருக்கிறார்கள். இதை அடுத்து கோயம்பேடு-விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் சேவை அடுத்த மாதம் ஆகஸ்டு முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Englis Summary : When to Start Koyambedu-Airport Metro rail service ?