சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி, சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகின்றது. அம்பத்தூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், அடையாறு, தியாகராய நகர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், தொடர் மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *