தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான “குரூப் சி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ மற்றும் தொழில்பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக், தேசிய, சர்வதேச, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விளையாட்டு திறன் மற்றும் விளையாட்டு சாதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.250. இதனை “Assistant Personnel Officer/HQ; South Western Railway, Hubballi” என்ற பெயரில் குறுக்குக்கோடிட்ட IPO-ஆக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrchubli.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சான்றொப்பம் செய்து சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Assistant Personnel Officer (HQ), Railway Recritment Cell, 2nd Floor, Old G.M.S. Office Building, Club Road, Huballi – 580 023.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.10.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrchubli.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *