புதுடில்லியில் நாளை முதல் 22ஆம் தேதி வரை சர்வதேச புத்தக திருவிழா நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தி எழுத்தாளர் நரேந்திர கோஹ்லி, கிரிக்கெட் வீரர் வீரேந்திரசேவாக் கலந்து கொள்கி்ன்றனர்.

மேலும் இவ்விழாவில் ஆஸ்திரேலியா, சீனா, எகிப்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, ஈரான், ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, நேபாளம், போலந்து, பாகிஸ்தான், சவுதிஅரேபியா, ஸ்பெயின், இலங்கை, துருக்கி, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, சுவீடன், மற்றும் கியூபா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன.