marina-beachஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தினம்’ செப்டம்பர் 27ஆம் தேதி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இவ்வருட சுற்றுலா தினம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் நேற்று சென்னை மெரினா கடற்கரையிலும் உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு உலக சுற்றுலா தின விழாவின் கருப்பொருளாக ‘நூறு கோடி சுற்றுலாப்பயணிகள், நூறு கோடி வாய்ப்புகள்’ என ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் சுற்றுலாத்துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி இந்த நடைபயணத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நடைபயணத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது சிறிய ரக விமானம் மூலம் மலர் தூவப்பட்ட காட்சி காண்போரை கவரும் வகையில் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் எம்.பி. ஜெ.ஜெயவர்தன், சுற்றுலாத் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா, சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

English Summary:World Tourism Day Celebration in Chennai Marina Beach.