பக்ரீத் பண்டிகை விடுமுறை வரும் 22-ஆம் தேதிக்குப் பதிலாக வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின் சார்பில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2018-ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில், பக்ரீத் பண்டிகை விடுமுறை ஆகஸ்ட் 22-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகை 23-ஆம் தேதி வருவதாகவும், அன்றைய தினமே அரசு விடுமுறை அறிவிக்க வேண்டுமெனவும் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தில்லி மற்றும் புதுதில்லியில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் வரும் 23-இல் பக்ரீத் பண்டிகைக்கான அரசு விடுமுறை விடப்படும். தில்லி மற்றும் புதுதில்லிக்கு வெளியே உள்ள மாநில அரசு அலுவலகங்கள் பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை விஷயத்தில் அவர்களாகவே ஆலோசித்து முடிவினை எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *