actervijayவிஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸாகும் என அனைவரும் எதிர்ப்பார்க்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 1ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் விஜய்யின் அறிமுகப்பாடல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த பாடலை விஜய்யின் பெருமைகளை கூறும் வகையில் நா.முத்துகுமார் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த பாடலின் வரிகளை ரசித்து படித்த விஜய், இந்த படத்தின் மற்ற பாடல்களையும் நா.முத்துகுமார் அவர்களே எழுதட்டும் என கூறியதாகவும், இதனால் இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் அவரே எழுதவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நா. முத்துகுமார் ஏற்கனவே விஜய் நடித்த ‘தலைவா’ உள்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்தான் ‘தலைவா’ படத்திற்கு இசையமைத்தவர் என்பதும் அனைவரும் தெரிந்ததே. நா.முத்துகுமார் இரண்டு முறை தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யின் ‘புலி’ படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன் மற்றும் பிரபல இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளிவரும் என கூறப்படுகிறது.

English Summary : 2 -time National Award winning popularity, combined with Vijay.