2015-16 தமிழ்நாட்டின் பட்ஜெட்டை திரு.ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதில்,

* காவல்துறைக்கு புதிய கட்டமைப்பு வசதிகளுக்காக 5568 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* நீதி நிர்வாக துறைக்கு 809 கோடி ஒதுக்கீடு.

* சாலைபாதுகாப்புக்கு 165 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வருவாய் துறைக்கு கட்டமைப்புகளுக்காக 338.73 கோடி ஒதுக்கீடு.

* தமிழ் மொழி வளர்ச்சிக்கு 46.77 கோடி ரூபாய்.

* வேளான் துறையில் அதிக முதலீடு: 6613.68 கோடி ரூபாய் விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு.

* 13,775 மொகாவாட் மின் தேவையை அரசு நிறைவு செய்துள்ளது.

* சூரிய சக்தி மின்சார உற்பத்தி திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்ற அரசு நடவடிக்கை.

* மின்சாரத்துறைக்கு மொத்தமாக 13586 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* பயிர்கடனுக்கு 5500 கோடி ஒதுக்கீடு. உரிய நேரத்தில் கடனை செலுத்துபவர்களுக்கு வட்டியின்றி வழங்கப்படும்.

* நதிநீர் இணைப்புக்கு 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு!