சென்னையில் உள்ள மீஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைந்துள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் நாளை அதாவது மார்ச் 27ஆம் தேதி ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல்நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் குறைந்த அளவு மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரிய மக்கள் தொடர்பு மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த பராமரிப்பு பணியின் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள 81449-30901, 81449-30902, 81449-30903, 81449-30400, 044-28454040 மற்றும் 45674567 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளமாறும் அந்த செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Maintenance work is commenced on Tomorrow in Minjur Substation. Power should be Off on some Chennai Areas.