lawதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆற்றல்சார் பள்ளியில் வழங்கப்படும் 3 ஆண்டுகள் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) சட்டப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால் இதற்கான கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் இருந்து வலியுறுத்தப்பட்டதால் இந்த கால அவகாசம் தற்போது ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பு http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை இந்த படிப்புக்கு விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் பள்ளியில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை முடிந்துள்ளது. இதையடுத்து, 7 அரசுக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

மேலும் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 25-லிருந்து 30-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 35-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

English summary : 3 year LLB Extension of time until July 15 to apply for the honors course