தமிழகத்தில் சுமார் 3,000 வி.ஏ.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தார். கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

தமிழகத்தில் 3,000 வி.ஏ.ஓ பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரே வி.ஏ.ஓ. இரண்டுக்கும் மேற்பட்ட கிராமங்களை கவனிப்பதால் சிரமம் ஏற்படுகிறது. கிராம நிர்வாகப் பணிகள் ஸ்தம்பித்துள்ளதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். அரசு விரைவில், பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும். மேலும் உயர்அதிகாரிகள் வி.ஏ.ஓ.க்களுக்கு நெருக்கடி கொடுக்காமல் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

English Summary: 3000 VAO Vacant Posts in Tamilnadu. Tamilnadu VAO Association’s General Secretary requests the Government to fulfill the Vacant Posts in VAO.