தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக 46வது சென்னை சர்வதேச புத்தக காட்சியானது நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை 18 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மேலும் 18 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்க நாளான ஜனவரி 6ம் தேதி மாலை 5.30 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த புத்தக காட்சியானது நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மொத்தம் 800க்கும் மேல் அரங்குகள் அமைக்கப்படும். மேலும், இந்த ஆண்டு திருநங்கைகளுக்கு ஒரு அரங்கு கொடுக்க முடிவு செய்துள்ளோம். இந்த புத்தக காட்சியானது கடந்த ஆண்டை காட்டிலும் சிறப்பாக நடைபெறும் என பபாசி செயலாளர் முருகன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *