சென்னை வடபழனியில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 28, 29 தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் மகப்பேறு மருத்துவமனை முதல் தெற்கு சிவன் கோயில் தெரு வரை பணிகள் நடைபெறவுள்ளன. 525 மி.மீ. விட்டமுள்ள குடிநீர் குழாயுடன் 500 மி.மீ. விட்டமுள்ள குடிநீர் குழாயை இணைக்கும் பணி நடைபெறுகிறது.

நாளை (28.12.2022) மற்றும் நாளை மறுநாள் (29.12.2022): பகுதி – 8,9 மற்றும் 10 ஆகிய இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *