பிரபல இயக்குனர் பிரியதர்ஷனை சமீபத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள பிரபல நடிகை லிசி தற்போது சுயசரிதை எழுதவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம், ஆனந்த ஆராதனை, மனசுக்குள் மத்தாப்பூ, பகலில் பெளர்ணமி போன்ற படங்களில் நடித்த நடிகை லிசி ஏராளமான மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்து கொண்ட லிசி, சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். இவர்களுடைய விவாகரத்து வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் தனது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தொகுத்து சுயசரிதை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ள நடிகை லிசி, அந்த சுயசரிதையில் தான் சந்தித்த பிரபலமானவர்கள், மறக்க முடியாத நிகழ்வுகள், தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் மற்றும் பிடித்தமான நாடுகள் ஆகியவை பற்றி எழுத உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது வாழ்க்கையில் மலர்ந்த காதல் அதற்காக தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் ஆகிய தகவல்களையும் வெளியிடவுள்ளதாகவும், இந்த தொடரை எழுதி முடித்த பிறகு அவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். லிசியின் சுயசரிதை தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Actress Lissy is going to write her Autobiography. She is going to write many interesting things that had done in her life.