‘தல’ என்று அன்போடு ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் அஜீத், ஒரு சிறந்த நடிகராக மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், புகைப்பட கலைஞர் என பல அவதாரங்களில் ஜொலித்து வருகிறார். இது எல்லாவற்றையும் விட அவர் மனிதநேயமுள்ள ஒரு சிறந்த மனிதர் என்றே அடையாளம் காட்டப்பட்டு வருகிறார். அவர் எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் செய்த மிகப்பெரிய உதவி ஒன்றின் தகவல் தற்போது ஃபேஸ்புக், டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் தந்தையை அஜீத் அழைத்து, சிகிச்சைக்கு தேவையான ரூ.25 லட்சம் பணத்தை ஒரே தவணையில் கொடுத்து உதவியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கேன்சரால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அஜீத்தின் தீவிர ரசிகை என்றும் அவருடைய உருவத்தை டாட்டூவாக தனது வலது கையில் வரைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. உதவி செய்ததை விளம்பரம் செய்து புகழ் பெறும் வழக்கம் அஜீத்துக்கு இல்லாததால், இதுவரை இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருந்ததாகவும் தற்போது உதவி பெற்ற அந்த தந்தை டுவிட்டரில் தெரிவித்ததால்தான் இந்த உதவி வெளியே தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அஜீத்திடம் உதவி பெற்ற அந்த சிறுமியின் தந்தை ‘அஜீத் தனது மகளின் சிகிச்சைக்கு ரூ.25 கொடுத்து உதவியதாகவும், அந்த நேரத்தில் தான் மிகவும் வறுமையில் இருந்ததாகவும் டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் தற்போது தானும் தன்னுடைய மகளும் நலமாக இருப்பதாகவும், இப்போது தான் நல்ல முறையில் இருப்பதால், அஜீத்துக்கு ஏதாவது செய்ய விரும்புவதாகவும், அவர் ஒப்புக்கொண்டால் தன்னுடைய சொத்து முழுவதையும் அஜீத்துக்கு எழுதி வைக்க தயாராக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

English Summary : Ajith Helps cancer affected girl providing Rs 25 lacks for her treatment.